எதிரியை வீழ்த்த முதலில் அவனது சித்தாந்தத்தை வீழ்த்து!

Wednesday, June 24, 2009

தமிழ் மாதங்களின் பிறப்பு -பெயர் வைப்பு முறை

கேள்வி ; தந்தை பெரியார் வலியுறுத்திய எழுத்து சீர்திருத்தத்தை நடைமுறைப் படுத்தா த தன்மையினால் தமிழின் வளர்ச்சி எத்தன்மையில் உள்ளதென கருதுகிறீர்கள்?
பதில்: மண்ணில் முளைவிடா விதைபோல் உள்ளது.

கேள்வி செம்மொழி எனும் தகுதியினை பெற்றிருப்பது -நண்ணில அரசு இசைவாணை வழங்கி யிருப்பது மண்ணில் முளைவிடா விதை என்று கருதுகிறீர்களா?
பதில் : பெயர் அளவில் ஏற்றுக் கொள்ளப் பட்டாலும் செய ல் அளவில் பயன் - பலன் எதுவுமில்லை என்பதை ஆராயின் உண்மை புலப்படும்.

கேள்வி செம்மொழி மையத்துக்கு அமர்த்தம் செய்யப்பட்டுள்ள ஐம்பெருங்குழு - எண்பேராயத்தின் பேராளர்கள் பற்றி தங்கள் கருத்து என்ன?
பதில் : சரக்கு சிறப்பாக இருக்க வேண்டும்; பயன் உண்டு. சரக்கு சிறப்பாக இல்லாது சரக்கு வழங்குவோர் மட்டும் எடுப்பாக இருந்து பயன் இல்லை.

கேள்வி : இந்திய நாட்டின் ஆட்சி மொழி தகுதி எம்மொழிக்கு இருக்கிறது?
பதில் :விருப்பு -வெறுப்புக்கு இடன் இல்லாது மொழிநூல் வல்லார்களின் கருத்தை ஆராயின் தமிழ் மொழி மட்டுமே அத்தகுதிக்கு உரியதாகும்.

கேள்வி : பிற மொழிகள் பேசுவோர் தமிழ் மொழியினை ஆட்சி மொழியாக ஒப்புதல் அளிப்பார்களா?
பதில் : பலமொழி பேசும் மக்களிடையே ஒரு மொழியினை ஆட்சி மொழி ஆக்குதற்கு ஒரு வரம்பு இருப்பின் ஆட்சி மொழி தகுதியினை தமிழ் தட்டிப் பறிக்கும்; மேலும் உலக ஆட்சி மொழியாக இலங்க த் தக்க தகுதியும் தமிழுக்கு உண்டு; உலக மொழிகள் பலவற்றிலும் தமிழ்ச் சொற்கள் வழங்குவதுபோல் பிறமொழிச் சொற்கள் உலக மொழிகள் பலவற்றில் வழங்கும் நிலையினைக் காணமுடியாது. மேலும் தாங்கள் கேட்ட கேள்வி க்கு பதிலை அளித்தேனே தவிர தமிழ் மொழிக்கு ஆட்சிமொழி தகுதியினை அளிக்க வேண்டுமென்று வலியுறுத்த வில்லை என்பதை தாங்கள் நினைவிற் கொள்ள வேண்டும். ஆட்சி மொழிக்குரிய தகுதி தமிழைத் தேடிவரும் காலம் ஒரு நாள் மலரும். அந்நாள் எந்நாள் என்பதை காலம் அளிக்க வேண்டிய பதில்.


கேள்வி : நமக்கு ஓர் ஆண்டு என்பது பிரமனுக்கு ஒரு நாள் என விளம்பும் நிலை குறித்து உங்கள் கருத்து என்ன?

பதில் : 360 பாகைகளை கொண்ட வான வெளியினை சுற்றி வர சூரியன் எடுத்துக் கொள்ளும் கால அளவு 365.25 நாட்கள்; சந்திரன் எடுத்துக் கொள்ளும் கால அளவு 30 நாட்கள்; செவ்வாய் மண்டலம் எடுத்துக் கொள்ளும் கால அளவு 18 மாதங்கள் ; புதன் மற்றும் சுக்கிர மண்டலங்கள் எடுத்துக் கொள்ளும் கால அளவு சூரியன் எடுத்துக் கொள்ளும் கால அளவாகும். வியாழன் எடுத்துக் கொள்ளும் கால அளவு 12 ஆண்டுகள்; சனி மண்டலம் எடுத்துக் கொள்ளும் கால அளவு 30 ஆண்டுகள்; இராகு, கேது துருவக் கோள்கள் எடுத்துக் கொள்ளும் கால அளவு 18 ஆண்டுகள் ஆகும். ஆனால் , புவி மண்டலம் எடூத்துக் கொள்ளும் கால அளவு 60 நாழிகை-ஒரு நாள்; இதனையே பிரமனுக்கு ஒரு நாள் என விளம்பும் நிலை வாழ்ந்து வருகிறது .


கேள்வி.: பொன் கிடைத்தாலும் புதன் கிடைக்காது என வழங்கும் பழமொழி யின் உட்பொருள் என்ன?
பதில்: பழந்தமிழர் கிழமை (வாரம்) ஒன்றுக்கு அறுநாட்களையே தெரிவு செய்து வழங்கி வந்தனர். அந்நெறிமுறையின்படி மாதம் ஒன்றுக்கு ஐந்து கிழமை
கள் இடம் பெறும் ; ஐந்து கிழமைகளை நிரல் படுத்துங்காலை மூன்றாம் கிழமையில் உள்ள புதன் நிறையுவா வரும் நாளில் மட்டுமே வரும். அந்நிறையுவா நாளில் புதனைத் தவிர்த்து பிற கோள்களின் பெயர்கள் வந்திடா அதன் காரணமாகவே பொன் கிடைத்தாலும் புதன் கிடைக்காது என விளம்பும் வழக்கம் இருந்து வருகிறது .


கேள்வி : கிழமைக்கு அறு நாட்களை கொள்வதற்கு - கொண்டதற்கு ஆதாரம் என்ன?
பதில்: பன்னிரு இராசி மண்டலங்களில் சூரியர்- சந்திரர் இருவருக்கும் ஒவ்வொரு மண்டலமும் ஏனைய ஐந்து கோள்களுக்கு இரண்டு , இரண்டு மண்டலமாக பகுக்கப் பட்டுள்ள தன்மையே உரிய சான்றாகும்.

கேள்வி : இந்திரன் மனைவியர் இருபத்தேழு பேர் என்பதை பற்றி உங்கள் கருத்து என்ன?
பதில் : நாம் வான மண்டலத்தில் காணத் தக்க நிலையில் உள்ள சந்திரனையே ஆணாக உருவகித்து இந்திரன், தேவேந்திரன் என புராண நூல்கள் உரைக்கின்றன; அடுத்தார்போல் வான மண்டலத்தி ல் ஒளிரும் விண் மீன்கள் இருபத்தேழை நங்கையராக பாவித்து -இந்திரன் மனைவியரென கொண்டு கதைகள் பலவற்றை புனைந்துள்ளனர் என்பதே யான் கொண்ட முடிபு.

கேள்வி : புதன் என்னும் சொல் தமிழ் அல்ல என்று சிலர் கூறுவது பற்றி உங்கள் முடிபு என்ன?
பதில் : புதன் தமிழ்ச் சொல்லே ; உலக வழக்கில் லகரம் தகரமாக மருவி வழங்கும் தன்மை உண்டு; இதனை மொழிநூல் வாணர் பாவாணர் அவர்கள் தம்முடைய தமிழ் வரலாறு எனும் நூலில் சுட்டிக் காட்டியுள்ளார்; இதனை அன்னாரின் நெறிப்பட்டோர் என காட்டிக் கொள்ள புதன் என்னும் சொல்லிற்கு மாற்றாக அறிவன் என்னும் சொல்லை எடுத்தாள்வோர் உணர வேண்டும். பாவாணர் அவர்கள் தாம் உரைத் த கருத்துக்கு சான்றாக எடுத்துக்காட்டியமை சலங்கை- சதங்கை என்பதாகும். எனவே புலன் >புதன் ஆக வழங்கிட ஏது உண்டு.

கேள்வி : திரிபுரம், மூவுலகம், மூவெயில், மூவேழ் உலகு என வழங்கும் தொகைச் சொற்கள் சுட்டிக் காட்டும் இடம் யாது?

பதில்: தாங்கள் சுட்டிக்காட்டிய பெயர்ச் சொற்கள் சுட்டிக் காட்டும் இடம் நம் இந்தக(இந்திய) நாட்டையே யாகும். தெற்கு, மேற்கு, வடக்கு என்னும் முப்பகுதிகளும் நீண்ட-நெடிய அரண்களாக பெருமலைத் தொடர்களை பண்டு கொண்டிருந்தன.


கேள்வி : தலை -இடை- கடை யுவா என்னும் தொகைச் சொற்கள் குறிக்கும் பொருள் என்ன?
பதில்: உவா என்றால் மூவைந்து நாட்கள் ஆகும். தலை -இடை கடை ஆகியன நிலைமொழி யாகிடின் முன் பதினைந்து, இடை பதினைந்து, இறுதி பதினைந்தாம் நாள் எனப் பொருள்படும். தலையுவா எனின் வளர்பிறை முதலாம் நாள்; இடையுவா எனின் நிறைமதி(பவுர்ணமி) நாள் ; கடை யுவா எனின் தேய் பிறை இறுதி நாள் (அமாவாசை) ஆகும்.

கேள்வி : தொல்காப்பிய எழுத்ததிகாரத்தில் "சகரக் கிளவியு மவற்றோ டற்றே, அவை அ,ஐ, ஔ எனும் மூன்றலங் கடையே " எனும் நூற்பாவிற்கு மொழி ஞாயிறு தேவநேயப் பாவாணர் அவர்கள் அளித்துள்ள அடிக்குறிப்பு பற்றி உங்கள் கருத்து என்ன?
பதில்: சகரக் கிளவியும் அவற்றோ டற்றே, அவை அ எனும் ஒன்றலங் கடையே " என மூல பாடம் இருந்திருத்தல் வேண்டுமென்று சகர அகரம் மொழிக்கு முதலாக வழங்கிய மைக்கு சான்றாக பல சொற்களை காட்டியுள்ளார் . அதே நேரம் 'அவை ' என்னும் சுட்டு மொழி குறிப்பது ஒன்றுக்கு மேற்பட்ட தன்மை யாகும். எனவே, என் மொழிநூல் அறிவுக்கு வழிகாட்டியாக திகழ்ந்த பாவாணர் அவர்களின் கூற்றில் உள்ள உண்மைப் பொருளும் தொல்காப்பியரின் உள்ள்க் கிடக்கை என்ன என்பதையும் ஒரு சேர ஆயுங் காலை புலப்படும் உண்மை பின்வருமாறு ஆகும். " சகரக் கிளவியும் அவற்றோ டற்றே, அவை ஐ, ஔ எனும் இரண்டலங்கடையே " என மூல பாடம் இருந்திருத்தல் வேண்டும். ஏடு எடுத்து எழுதியோரால் அவை என்னும் சொல்லின் கண் ஈற்றில் உள்ள ' வை ' யினை விடுத்து " அவை அ, ஐ , ஔ எனும் மூன்றலங் கடையே " என பிழைபட எழுதிய வழு வழக்கே பின் தொடர்ந்து வழக்கில் நிலைபெற்று வழங்குகிறது என்று கூறலாம்.

கேள்வி : உதயாதி நாழிகைக்கு சூரிய உதயத்தை முதன்மையாக கொள்வது சரியா? தவறா?

பதில் : சூரிய உதயத்தை முதன்மையாக கொள்வது பழந்தமிழரின் கோட்பாட்டிற்கு இயைந்ததன்று . ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு பிறை மதியினை வைத்தே கணக்கிட வேண்டும் என்பது என் முடிபாகும்.

கேள்வி :தமிழ்த் தொடர் ஆண்டில் - நிகழ்வாண்டின் கால எல்லை என்ன?
பதில் : ஏழாம் மன்வந்திரத்தில் 8922965185 -ஆம் ஆண்டாகும்.

கேள்வி : இராசி மண்டலத்தில் முதல் மண்டலமாக நம் முன்னோர் கொண்டிருந்த மண்டலம் எது?
பதில் : சிம்மம் ஆகும்.

கேள்வி : தமிழ் மாதங்களின் பிறப்பு -பெயர் வைப்பு முறை பற்றி உங்கள் கருத்து என்ன?
பதில் : சிம்மத்திற்கு ஐந்தாம் மண்டலம் தனுசு; தனுசுவில் இடம் பெற்றிருக்கும் நட்சத்திரம் சித்திரை; முதல் மாதம் . கன்னியிலிருந்து ஐந்தாம் மண்டலம் மகரம்; மகரத்தில் இடம் பெற்றிருக்கும் நாண் மீன் விசாகம்; விசாகம் வைகாசி என திரிந்து வழங்குகிறது; கேரளத்தில் விசாகம் என வழங்கும் நிலை இன்றும் உள்ளது, நான் மேற்சுட்டிக் காட்டிய நெறிநின்று பார்ப்பின் தமிழ் மாத பிறப்பு முறை -பெயர் வைப்பு முறை இனிதே புலப்படும்.

கேள்வி ; கிழமைகள் தெரிவு செய்தமைக்கு நெறிமுறை யென்ன?
பதில் : சிம்மம் --- கடகம் : ஞாயிறு -- திங்கள் ; விருச்சிகம்--மேழம் : செவ்வாய்; கன்னி --மிதுனம் : புதன் ; தனுசு --மீனம் : குரு: இடபம் --துலாம் :வெள்ளி ( சுக்கிரன்) மகரம் --கும்பம் : சனி; இதுவே பெயர் தெரிவு செய்த முறையாகும். மேலே எடுத்துக் காட்டிய மண்டலங்கள் ஒவ்வொன்றும் கேந்திர முறையில் பகுக்கப் பட்டுள்ளதை காணலாம்.


கேள்வி : தெளிவான விளக்கம் வேண்டும்? .
பதில் :சிம்மம் --கடகம் என்னும் இரு மண்டலங்கள ஞாயிறு- திங்களாகும் ; சிம்மம் கடகத்திலிருந்து நான்காம் மண்டலம் விருச்சிகம்- மேழம் (செவ்வாய்) ஆகும் ;விருச்சிகம் --மேழத்திலிருந்து நான்காம் மண்டலம் கன்னி --மிதுனம் (புதன் ) ஆகும். கன்னி --மிதுனத்திலிருந்து நான் காம் மண்டலம் தனுசு --மீனம் (வியாழன்) ஆகும். தனுசு --மீனத்திலிருந்து நான்காம் மண்டலம் இடபம் --துலாம் (வெள்ளி) ஆகும். இடபம் --துலாத்திலிருந்து நான்காம் மண்டலம் மகரம் --கும்பம் (சனி) ஆகும் . இப்பகுப்பு முறையினை மேல் ஆறு- கீழ் ஆறு என மண்டலங்களை வரையறுத்து பார்ப்பின் தெளிவு கிட்டும்,

கேள்வி : நட்சத்திர கால அளவு குறித்து வேறுபாடு இருப்பின் விளக்கம் வேண்டும் ?
பதில் : வேறுபாடு உண்டு என்பதால் விளக்கமும் உண்டு. (1 ) கார்த்திகை ---1.625;(2) உரோகிணி-- 1.625; (3) மிருகசீரிடம்--2.00: (4) திருவாதிரை --1.5; (5)புனர் பூசம் --1.5; (6) பூசம் --1.5; (7) ஆயில்யம் --2.5; (8) மகம் --2.25 ; (9) பூரம் --1.5; (10) உத்திரம் --3.00 ; (11) அத்தம் --3-00; (12)கித்திரை --2.00; (13) சுவாதி --1.5 ; (14) விசாகம் --4.00 ; (15) அனுசம் --3.00; (16) கேட்டை --1.5; (17) மூலம் --1.5; (18) பூராடம் --2.75; (19) உத்திராடம் --2.75; ( 20) திருவோணம்-- 3.00; (21) அவிட்டம் --3.00; (22) சதயம் --2.5; (23) பூரட்டாதி--2.75; (24 ) உத்திரட்டாதி--2.75 (25) இரேவதி -- 1.75; (26) அசுவணி--2. 00; (27) பரணி 1.25


கேள்வி : கோள்களில் செலவு முறையில்-- தமிழர்களின் கோட்பாட்டின்படி மாற்றம் உண்டா?
பதில் : உண்டு .

கேள்வி : மேழத்திலிருந்து மீனம் ஈறாக வடகிழக்கு செலவுமுறை உள்ளது; இராகு கேதுக்கள் என்னும் துருவக் கோள்கள் எதிர்மறைச் செலவினை கொண்டுள்ளன. இவற்றில் மாற்றம் கொண்டுள்ளவை எது?
பதில் : கோள்களின் செலவு முறை தற்போதைய வழக்கில் வடகிழக்கு நெறியில் உள்ளன ; இந்நெறிமுறை தமிழர் கோட்பாட்டிற்கு உடன்பாடு இல்லாதது; உடன்பாடுகொண்ட கோட்பாடு தென்கிழக்கு செலவுமுறை ஆகும் என்பது என் கருத்தாகும்; (1) சிம்மம் : (3) கன்னி ; (5) துலை ; (7) நளி ; ( 9) தனுசு ; (11) மகரம் ; (2) கடகம் ; (4) மிதுனம்; (6) இடபம்; (8) மேழம்; (10) மீனம்: (12) கும்பம் ஆகிய இராசி மண்டலங்களில் சூரியன் முதல் சனி ஈறாக உள்ள எழு கோள்களும் மேற்சுட்டிக் காட்டிய எண் வரிசைப்படி முறையே வர வேண்டும்.


கேள்வி : தாங்கள் சுட்டிக் காட்டும் கோட்பாட்டிற்கு காரணம் என்ன?
பதில் : அறுபருவத்தை முன்னோர் கணக்கிட்டதன்மை தடம் மாறியதுதான்.


சிம்மம்--கடகம் கார்காலம் ; மிதுனம் --கன்னி கூதிர் காலம் ; துலாம்--இடபம் முன்பனிக் காலம் ; விருச்சிகம் --மேழம் பின்பனிக் காலம் ; தனுசு--மீனம் இள வேனிற் காலம் ; மகரம் --கும்பம் முது வேனிற் காலம். இவ் வரம்பு முறை புவியியல், அறிவியல், வானவியல் ஆகியனவற்றுக்கு இயைந்தது . மேலும் தமிழரின் கோட்பாட்டிற்கு உடன்பட்டது.

Wednesday, June 17, 2009


கேள்வி : கிழமைக்கு அறுநாளென கொண்டதற்கு ஆதாரம் என்ன?

பதில் : சூரியர் -சந்திரர் இருவருக்கும் ஒவ்வொரு மண்டலமும் மற்ற கோள்களுக்கு இரு மண்டலங்களும் உள்ளதே உரிய சான்றாகும்.

கேள்வி : எழு நாட்களை அறு நாட்களாக கொள்ளின் நீக்கப் படும் கிழமை -மண்டலம் எது?

பதில் : எம்மண்டலத்தையும் நீக்க வேண்டிய தில்லை ; முன் வரும் முப்பது நாழிகை சூரியனுக்கும் பின் வரும் முப்பது நாழிகை சந்திரனுக்கும் என இருவருக்கும் ஒரு நாளை அரை, அரை நாளாக கொண்டுவிடின்.

கேள்வி : தேசம், தேசியம் என்னும் இரு சொற்களும் தமிழ்ச்சொல்லாக தெரிய வில்லை இது குறித்து தங்கள் கருத்து என்ன?

பதில் : தேசம், தேசியம் என்னும் இரு சொற்களும் தமிழ்ச் சொல்லின் திரிபுகளாகும்; தேஎம்> தேயெம்>தேயம்> தேசம் என்பது வே இதன் வரலாறு ஆகும். வாயில்>வாயல்> வாசல் என வழங்கும் மற்றொரு வழக்கும் என் கூற்றை உறுதிப்படுத்தும் தன்மையில் உள்ளதும் இங்கு ஒப்பு நோக்கத் தக்கது. தேசியம் என்னும் சொல் தேசம் என்னும் சொல்லிலிருந்து கிளைத்த சொல்லாகும்.

கேள்வி : திராவிடம் என்னும் பெயர்ச் சொல் வழங்கும் தன்மையினைக் குறித்து உங்கள் கருத்து என்ன?

பதில் : திரிபுர என்னும் சொல் லே திராவிடம் என திரிந்து வழங்குகிறது. திரிபுரம் >திரிவிடம்> திரவிடம் என்பது இதன் வரலாறு ஆகும். திரிபுரம்-திரிவிடம்- திரவிடம் -திராவிடம் -மூவிடம்- மூவரண்- மூவெயில்- மூவுலகு என்பன யாவும் ஒருபொருள் குறித்த பல சொற்கள்ஆகும் ..

கேள்வி; பழந் தமிழர்களின் கணியக் கோட்பாட்டில் முதல் இராசி மண்டலம் எது?

பதில்: சிம்மம் ஆகும்.

கேள்வி: முப்பத்து முக்கோடி தேவர்கள் என புராணங்கள் உரைப்பது பற்றி உங்கள் கருத்து என்ன?

பதில்: முப்பது முக்குறை கோடி என்னும் தொடரே முப்பத்து முக்கோடி என இடைக்குறை கண்டு வழக்கில் நிலைபெற்றுள்ளது. முப்பதில் மூன்று குறைந்த இருபத்தேழு என்பது மேல் இடம் பெற்றுள்ள தொடரின் பொருளாகும். இருபத்தேழு என்னும் எண்ணுத் தொகை கணிய நூலில் இடம்பெறும் விண்மீன்களின் தொகுதிப் பெயராகும்.

கேள்வி : நாற்பத்தெட்டாயிரம் இருடிகள் என்றால் யாரைக் குறிக்கும்?

பதில் : நான்கு- எட்டு என்னும் எண்ணுப் பெயர்களை பிரித்துப் படிக்காது நாற்பத்தெட்டு என தொகுத்துப் படித்த காரணத்தால் ஏற்பட்ட வழு வழக்கு வழக்கில் நிலைபெற்றுவிட்டது. நான்கும் +எட்டும் = பன்னிரண்டுஎன்னும் கூட்டுத்தொகை வான மண்டலத்தின் பகுப்பாகும் என்பதை நான் கூறத் தேவையில்லை என்று கருதுகிறேன்.


கேள்வி: சூரியன் ஏழு குதிரைகள் பூட்டிய தேரினில் நாளும் நானிலத்தை வலம் வருகிறான் என்பதை பற்றி உங்கள் கருத்து என்ன?

பதில் : பகலவன் எழுநிற கதிர்கள் புடை சூழ நாளும் வலம் வருவதனையே ஏழு குதிரையென உருவகப் படுத்தி உரைத்தனர். இதனை உண்மையென நம்பி வாழ்ந்த காலமும் உண்டு . இன்று அந்நிலை மாறி வருகின்றன.

" எழுநிறப் பரிகளை தேரினிற் பூட்டி
எழுந்திடும் பரிதியின் திருமுக முன்னே
பச்சரிசி தன்னை பானையி லிட்டு
எச்ச மின்றி இன்சுவை கலந்து
மனைதோறும் பொங்கலோ பொங்க லென்று
மனைதனில் மங்கையர் பொங்கிடும் முறையில்
காரிருள் போக்கும் கதிரோ னெழுமுன்
கருக்கலி லெழுந்து கழனியை வுழுது
காற்றிலும் மழையிலும் கண்ணயர் வின்றி
சேற்றினி லுழைத்து செந்நெல் விளைத்து
உலகோர் பசியினை அயராது தணிக்கும்
உலகியப் பொங்கல் திருநாள் வாழிய"

எனும் பா ஒன்றினை 1972-ல் புரட்சிக் குரல் என்னும் எழுச்சி இதழில் படைத்தமை கொண்டு தாங்கள் நான் உரைத்த கருத்து நேற்று பெய்த மழையில் இன்று முளைத்த காளான் அல்ல என்பதை உணரலாம்.

Tuesday, June 16, 2009

இந்திய நாட்டின் ஆட்சி மொழி

கேள்வி ; தந்தை பெரியார் வலியுறுத்திய எழுத்து சீர்திருத்தத்தை நடைமுறைப் படுத்தா த தன்மையினால் தமிழின் வளர்ச்சி எத்தன்மையில் உள்ளதென கருதுகிறீர்கள்?

பதில்: மண்ணில் முளைவிடா விதைபோல் உள்ளது.

கேள்வி : செம்மொழி எனும் தகுதியினை பெற்றிருப்பது -நண்ணில அரசு இசைவாணை வழங்கி யிருப்பது மண்ணில் முளைவிடா விதை என்று கருதுகிறீர்களா?

பதில் : பெயர் அளவில் ஏற்றுக் கொள்ளப் பட்டாலும் செய ல் அளவில் பயன் - பலன் எதுவுமில்லை என்பதை ஆராயின் உண்மை புலப்படும்.

கேள்வி: செம்மொழி மையத்துக்கு அமர்த்தம் செய்யப்பட்டுள்ள ஐம்பெருங்குழு - எண்பேராயத்தின் பேராளர்கள் பற்றி தங்கள் கருத்து என்ன?

பதில் : சரக்கு சிறப்பாக இருக்க வேண்டும்; பயன் உண்டு. சரக்கு சிறப்பாக இல்லாது சரக்கு வழங்குவோர் மட்டும் எடுப்பாக இருந்து பயன் இல்லை.


கேள்வி : இந்திய நாட்டின் ஆட்சி மொழி தகுதி எம்மொழிக்கு இருக்கிறது?

பதில் : விருப்பு -வெறுப்புக்கு இடன் இல்லாது மொழிநூல் வல்லார்களின் கருத்தை ஆராயின் தமிழ் மொழி மட்டுமே அத்தகுதிக்கு உரியதாகும்.

கேள்வி : பிற மொழிகள் பேசுவோர் தமிழ் மொழியினை ஆட்சி மொழியாக ஒப்புதல் அளிப்பார்களா?

பதில் : பலமொழி பேசும் மக்களிடையே ஒரு மொழியினை ஆட்சி மொழி ஆக்குதற்கு ஒரு வரம்பு இருப்பின் ஆட்சி மொழி தகுதியினை தமிழ் தட்டிப் பறிக்கும்; மேலும் உலக ஆட்சி மொழியாக இலங்க த் தக்க தகுதியும் தமிழுக்கு உண்டு; உலக மொழிகள் பலவற்றிலும் தமிழ்ச் சொற்கள் வழங்குவதுபோல் பிறமொழிச் சொற்கள் உலக மொழிகள் பலவற்றில் வழங்கும் நிலையினைக் காணமுடியாது. மேலும் தாங்கள் கேட்ட கேள்வி க்கு பதிலை அளித்தேனே தவிர தமிழ் மொழிக்கு ஆட்சிமொழி தகுதியினை அளிக்க வேண்டுமென்று வலியுறுத்த வில்லை என்பதை தாங்கள் நினைவிற் கொள்ள வேண்டும். ஆட்சி மொழிக்குரிய தகுதி தமிழைத் தேடிவரும் காலம் ஒரு நாள் மலரும். அந்நாள் எந்நாள் என்பதை காலம் அளிக்க வேண்டிய பதில்.


கேள்வி : நமக்கு ஓர் ஆண்டு என்பது பிரமனுக்கு ஒரு நாள் என விளம்பும் நிலை குறித்து உங்கள் கருத்து என்ன?

பதில் : 360 பாகைகளை கொண்ட வான வெளியினை சுற்றி வர சூரியன் எடுத்துக் கொள்ளும் கால அளவு 365.25 நாட்கள்; சந்திரன் எடுத்துக் கொள்ளும் கால அளவு 30 நாட்கள்; செவ்வாய் மண்டலம் எடுத்துக் கொள்ளும் கால அளவு 18 மாதங்கள் ; புதன் மற்றும் சுக்கிர மண்டலங்கள் எடுத்துக் கொள்ளும் கால அளவு சூரியன் எடுத்துக் கொள்ளும் கால அளவாகும். வியாழன் எடுத்துக் கொள்ளும் கால அளவு 12 ஆண்டுகள்; சனி மண்டலம் எடுத்துக் கொள்ளும் கால அளவு 30 ஆண்டுகள்; இராகு, கேது துருவக் கோள்கள் எடுத்துக் கொள்ளும் கால அளவு 18 ஆண்டுகள் ஆகும். ஆனால் , புவி மண்டலம் எடூத்துக் கொள்ளும் கால அளவு 60 நாழிகை-ஒரு நாள்; இதனையே பிரமனுக்கு ஒரு நாள் என விளம்பும் நிலை வாழ்ந்து வருகிறது .



கேள்வி.: பொன் கிடைத்தாலும் புதன் கிடைக்காது என வழங்கும் பழமொழி யின் உட்பொருள் என்ன?

பதில்: பழந்தமிழர் கிழமை (வாரம்) ஒன்றுக்கு அறுநாட்களையே தெரிவு செய்து வழங்கி வந்தனர். அந்நெறிமுறையின்படி மாதம் ஒன்றுக்கு ஐந்து கிழமை
கள் இடம் பெறும் ; ஐந்து கிழமைகளை நிரல் படுத்துங்காலை மூன்றாம் கிழமையில் உள்ள புதன் நிறையுவா வரும் நாளில் மட்டுமே வரும். அந்நிறையுவா நாளில் புதனைத் தவிர்த்து பிற கோள்களின் பெயர்கள் வந்திடா அதன் காரணமாகவே பொன் கிடைத்தாலும் புதன் கிடைக்காது என விளம்பும் வழக்கம் இருந்து வருகிறது .


கேள்வி : கிழமைக்கு அறு நாட்களை கொள்வதற்கு - கொண்டதற்கு ஆதாரம் என்ன?
பதில்: பன்னிரு இராசி மண்டலங்களில் சூரியர்- சந்திரர் இருவருக்கும் ஒவ்வொரு மண்டலமும் ஏனைய ஐந்து கோள்களுக்கு இரண்டு , இரண்டு மண்டலமாக பகுக்கப் பட்டுள்ள தன்மையே உரிய சான்றாகும்.

Monday, June 15, 2009

மன்பதை ஏற்கா முடிபு

கேள்வி: தமிழக அரசு நடைமுறைக்கு கொண்டு வந்துள்ள தலைத் திங்கள் குறித்து தங்கள் கருத்து என்ன? தாங்கள் அரசின் திட்டத்தை ஏற்கிறீர்களா?

பதில்: மன்பதை ஏற்கா முடிபு என்பது தமிழ் ஆண்டு பிற்ப்பு வழக்கம்போல் உலகோர் கொண்டாடியதே இதற்குரிய சான்று ஆகும் .


கேள்வி : தமிழ்த் தொடர் ஆண்டு எளிதில் அறிய - கையாள தமிழக அரசு எடுத்த நடவடிக்கை குறித்து உங்கள் கருத்து என்ன?

பதில்: தவறான முடிபு என்பதை தக்க ஆதாரத்துடன் நீதிமன்றத்தில் எடுத்துரைத்து உண்மையினை உலகுக்கு உணர்த்த வாதாட உரிய தமிழ் அறிஞர்கள் முன்வராது இருப்பதுதான்.


கேள்வி : அறுபது ஆண்டு கள் பிறப்பு குறித்து உங்கள் கருத்து என்ன?

பதில்: இருபத்தேழு நட்சத்திரங்கள் சுழற்சி முறையினை; வளர்பிறை - தேய்பிறை சுழற்சி முறையினை ஏற்போர் அறுபது ஆண்டுகளின் இருபத்தேழு பெயர்களை ஏற்பதில் தவறில்லை ; ஆனால் அதன் உண்மையினை உணராமல் இருப்பது தமிழ் மக்களின் மடமை என கருதுகிறேன். அம்மடமைத் தன்மையினை போக்க ஆக்கப் பணிகள் தொடரும் நிலை உள்ளது.

கேள்வி: அறுபது ஆண்டுகள் குறித்து வழங்கும் புராணக் கதையினைப் பற்றி உங்கள் கருத்து எத்தன்மையானது ?

பதில் : அறிவியல் சார்ந்த கருத்தை உட்பொருளாக கொண்டு உரைத்திருக்கும் சிறப்பு போற்றத்தக்க தாகும்.


கேள்வி : சமனுடைமை-பொதுவுடைமை கோட்பாட்டினைக் கொண்ட உருசிய - சீனா நாடுகள் விடுதலைப் புலிகளுக்கு எதிராக இலங்கைக்கு பல உதவிகளை அளித்துக் கொண்டிருப்பதால் அவ்விரு நாடுகள் மறந்த கோட்பாடு என்ன?

பதில்:: தனியுடைமை கோட்பாட்டை ஒழிப்பதே தம் கடமை யென ஒரு காலகட்டத்தில் கொண்டிருந்தாலும் இப்போது அக்கோட்பாடு சீர்கேடுற்று - நாடுவாரற்று நடைபிணமாகிக் கொண்டிருக்கும் நிலையினை கண்டிட அந்நாடுகள் வழி வகுத்துக் கொண்டிருக்கின்றன. மேலும் தனியுடைமை கோட்பாட்டிற்கு மூல வேராய் உள்ள ஆதிக்கக் கோட்பாட்டை அழித்திட எண்ணாது உள்ளூர உதவியினை அளித்து உயிரூட்டம் தந்து பாதுகாப்பதை அவர்கள் உணராது மறந்து இயங்குவதாகும்.


கேள்வி : நம் நாட்டிற்கு தே வையான கோட்பாடு தனியுடைமையா? பொதுவுடைமையா?
பதில்: பல நூறு ஆண்டுகளுக்கு முன்பே மேலை நாட்டு அறிஞன் சுட்டிக் காட்டியபடி நம் நாட்டிற்கு தேவையான கோட்பாடு அன்புடைமை கோட்பாடு ஆகும். இக்கோட்பாடு நம் நாட்டிற்கு மட்டுமின்றி உலக நாடுகள் அனைத்துக்கும் வேண்டப்படும் கோட்பாடு ஆகும்.

கேள்வி : அன்புடைமை கோட்பாட்டிற்கு அடித்தளம் என்ன?
பதில் : இந்து சமயம் வலியுறுத்தும் ஆணவம் , கன்மம், மாயை ஆகியவற்றை அழிக்கும் நெறிமுறைகளை தன்னுள் கொண்டதுதான் அன்புடைமையின் அடித்தளம் ஆகும் .

கேள்வி : புராண இதிகாச நாயகர்கள் கற்பனை படைப்பு என்னும் கொள்கையினை யுடைய தாங்கள் இந்து சமய கோட்பாட்டை ஆதரிப்பது ஏன்?
பதில் : கருத்தின் சாரத்தை ஏற்கும் நான் கருத்தின் நாயகர்களாக வலம் வரும் கற்பனைப் படைப்பைமூலவேராக உள்ளதை உணர்ந்ததுதான்.


கேள்வி : பொதுவுடைமை க் கோட்பாடே நடைபிணமாகிக் கொண்டிருக்கும் இக்காலக் கட்டத்தில் அன்புடைமை கோட்பாடு தழைக்கும் என்று கருதுவது மடத்தன்மை என பிறர்கூறுவது பற்றி தங்கள் கருத்து ?

பதில்: மாணிக்கக் கல்லை கூழாங்கல் என கூறுவோர் எத்தன்மையானவன் என்று நாம் எண்ணுகிறோமோ அதுபோன்றுதான் பிறர் கூறும் கருத்துக்கு நான் அளிக்கும் விளக்கம் ஆகும்.


கேள்வி : இமயம் முதல் குமரி வரை நமது நாடு என்று இற்றையத் தமிழர்கள் போராட வேண்டும் கருதுகிறீர்களா? திருத்தணி முதல் குமரி வரை பெற்றது போதும் என்று அமைதியுடன் இருக்க வேண்டும் என்று விரும்புகிறீர்களா?
பதில் : திருத்தணி முதல் குமரி வரை பெற்றது போதும் என்று முடங்கிக் கிடக்க வேண்டுமென்று நான் எண்ண வில்லை ;அதே நேரம் இமயம் முதல் குமரி வரை எங்களது நாடு என்று போர்க்குரல் எழுப்ப வேண்டும் , போராட வேண்டும் என்று கூறவில்லை ; மாறாக இமயம் குமரி வரை இழந்த உரிமையினை -தலைமையினை -பெருமையினை மீட்டிட நாம் - நம் மக்கள் ஆற்ற வேண்டிய பணிகளை அறிந்து ஆற்ற வேண்டும் என்பதுதான் என் விருப்பம்.

கேள்வி : தனி நாடு கேட்டு போராடும் விடுதலைப் புலிகள் தமிழ் ஈழம் மலர்வதை விரும்புவார்களா? உடன்பட்டு செயல்படுவார்களா?

பதில் : தங்களுக்கு எதிராக செயல்பட்டவர்களுக்கு பாடம் புகட்ட வேண்டுமென்ற கடமையுள்ள காரணத்தால் அதற்குரிய காலத்தை எதிர் பார்த்திருப்பவர்களுக்கு உரிய காலமும் சூழலும் கனிந்து வரும்பொழுது அதனை வீணாக்கும் திறன் விடுதலைப் புலிகள் பெற்றவர்கள் அல்ல; எனவே விரும்பி செயல்படும் காலமும் நேரமும் பொருந்தி வரும் நாள் வெகு தொலைவில் இல்லை.


கேள்வி : ஈழத் தமிழர்கள் உடன்பாடு எத்தன்மையில் இருக்கும் ?

பதில் : வரிசையில் நின்று உணவு பொட்டலத்தை பெற்று அரை வயிறு கழுவும் நிலை உள்ளவனுக்கு தலைவாழை இலை விரித்து பால் பாயாசத்துடன் பதினெட்டுவகை காய்கறி கூட்டுடன் விருந்தளிக்கும் தன்மை கொண்டதாக இருக்கும் .


கேள்வி : ஈழத் தமிழம் இந்திய -இலங்கை இரு நாடுகளுக்கிடையே ஒரு நாட்டின் தலைமையினை ஏற்பின் ஒவ்வொரு நாட்டின் அணுகுமுறை எத்தன்மையில் இருக்கும் ?
பதில் : மாற்றாந்தாய் மனப்பான்மை இலங்கை அரசிடமும் ; உடன்பிறப்புத் தாயின் உணர்வினை இந்திய அரசிடமும் காணத்தக்க நிலையில் இருக்கும் .

கேள்வி : தமிழ் ஈழம் மலர்வதை இலங்கை அரசு விரும்பும் தன்மை இருக்குமா?
பதில் : தான் துய்த்து வந்த இன்பத்தை அத்துணை எளிதில் துறந்திட மாபெரும் ஈகை நாடா இலங்கை அரசு; சாக்கடை நீரில் சந்தனத்தின் மணத்தினை எதிர்பார்ப்பது போன்றது உங்களுடைய கேள்வியின் தன்மை. கடந்த கால வரலாற்றுச் சுவடுகள் பல உள்ளன நான் கூறிய கூற்றுக்கு ஆதாரமாக .


கேள்வி : தமிழ் ஈழம் மலர்வதை தடுத்திட இலங்கை அரசின் அணுகுமுறை வெற்றிபெறுமா? வீழ்ச்சி யுறுமா?

பதில் : அரை நூற்றாண்டு கால முயற்சி இலங்கை அரசுக்கு பயன் -பலன் அளித்திருக்கலாம் , ஆனால் , இனி எடுக்கும் முயற்சி வீணான தாகும். ஏன் ? எனின் அடுத்த பொதுத் தேர்தலுக்குள் தமிழ் ஈழம் மலர்வதை யாரும் தடுக்க முடியாது.


கேள்வி : தாங்கள் இத்துணை உறுதியுடன் கூறுவதற்கு காரணம் என்ன?
பதில் : "சிறுபடையான் செல்லிடம் சேரின் உறுபடையான் ஊக்கம் அழித்து விடும்" என்ற வள்ளுவனின் வாய் மொழி யின் உண்மையினை உணர்ந்ததுதான்.


கேள்வி: தமிழ் ஈழம் மலர்ந்திட யார் யார் பாடுபட வேண்டும் என்று கருதுகிறீர்கள் ?
பதில் : தமிழ் ஈழம் மலர்ந்திட நாட்டம் கொண்ட உண்மை உணர்வாளிகள் மற்றும் உரிய தலைவர்கள் ஆகும் .

கேள்வி : யாரும் கூறா கருத்தினை தாங்கள் கூறுவதற்கு காரணம் யார் ?
பதில் : இலங்கை அரசின் -உதவிய நாடுகளின் அணுகு முறையே இதற்கு காரணமாகும் .


கேள்வி : புராணங்கள் சுட்டிக் காட்டும் அரக்கர் இனம் யார் என்று கருதுகிறீர்கள்?
பதில்: பண்டு காடுறை வாழ்க்கையினை மேற்கொண்டிருந்த காட்டு வாசிகள் ; இன்று மனித நேயமற்ற மாந்தர்கள் . ஆகும்.

கேள்வி : தேவர்கள் என்று கூறத்தக்கவர் யார்?
பதில்: திருந்திய நகர வாழ்க்கையினை மேற்கொண்டு நன்னெறியில் நடைபோட்டவர்கள் அன்று ; குறை காணமுடியா நிலையில் தன் கடமையினை உணர்ந்து செவ்வனே செயல் படும் நல்லோர் சிலர் இன்று .

கேள்வி : " சிங்களத் தீவினுக்கோர் பாலம் அமைப்போம் " என்று அன்று பாட்டிசைத்த பாரதியின் கனவு நனவாகிறது என்பதை ஏற்கிறீர்களா?
பதில் : ஏற்கும் சூழல் உருவாகி வருகிறது .

கேள் வி : இந்திய அரசின் அணுகுமுறைதான் அச்சூழல் என்று கருதுகிறீர்களா?
பதில் : அன்று பாரதி சுட்டிக் காட்டிய பாலம் உதவி அடிப்படை கொண்டது அல்ல; உறவு அடிப்படை கொண்டது ஆகும். உறவு அடிப்படையில் அமைய விருக்கும் தமிழ் ஈழ இணையப் பாலம் ஆகும். அவ்விணையப் பாலம் ஈழத் தமிழம் இந்தகம் என்னும் இந்திய நாட்டின் ஒரு மாநிலமாக - ஈழத் தமிழர் இந்தக அரசில் பங்கு பெரும் உரிமையுடையோராக - ஈழத்தமிழம் இந்தக நாட்டின் காப்பரணாக வருவாய்த் தளமாக அமையப் போவது உண்மை. இவ்வுண்மையினை இருநில மக்களும் வெகு விரைவில் உணர்வர் . உணரும் நாள் அருகில் உள்ளது. மலரும் அந்நாள் இருநிலத் தமிழர் மட்டுமின்றி உலகத் தமிழர் அனைவரும் மகிழும் பொன்னாள் ஆகும்.

கேள்வி : இந்தி ய நாட்டின் ஒற்றுமை - ஒருமைப் பாட்டிற்கு அடித்தளம் அரசியல் அமைப்பா? அரசியல் கட்சிகளா ?
பதில் : இரண்டும் அல்ல; இந்து சமயம் ஒன்றுதான்; இந்து சமயம் இமயம் முதல் குமரிவரை வாழும் பெரும்பான்மை மக்களை பிணைக்கவல்ல பாசக் கயிறு என்று கூறலாம் .

கேள்வி : பலமொழி, பல இனம் உள்ள நம் நாட்டில் தாங்கள் கூறும் கூற்றை ஏற்பின் பலன்-பயன் எய்தும் மக்கள் யாராக இருப்பர்?
பதில்: பலன் -பயன் எய்துவோர் ஒரு பகுதியினர் மட்டுமல்ல; அனைவரும் ஆவர். ஆனால் பெருமையினை எய்துவது தமிழினம் மட்டுமே ஆகும் .


கேள்வி : தமிழ் இனம் மட்டும் பெருமை பெறக் காரணம் என்ன?

பதில் : தமிழரின் முன்னோர் வகுத்த நெறிமுறை; வளர்த்த மொழி ; புரந்து நின்ற சமயம் முதலியன வாகும்.


கேள்வி : பெருமை பெற வேண்டிய தமிழினம் உரிமை இழந்து வாழ வேண்டிய நிலைக்கு காரணம் ?
பதில் : தன் உரிமையினை, தலைமையினை, பெருமையினை மறந்து அடுத்தவர் தாள் பணிந்து கிடக்கும் நிலையினை எண்ணிப் பார்க்காது இயங்கிக் கொண்டிருப்பதை - மடமை என்பதை உணராததுதான்.


கேள்வி : ஒரு மொழி யின் வளர்ச்சி எதனைக் காட்டுகிறது?

பதில் : பேசும் மக்களின் ஏற்றத்தை சுட்டிக் காட்டுகிறது.

கேள்வி :தமிழின் வள ர்ச்சி தற்பொழுது எந்நிலையில் உள்ளது ?

பதில் : தந்தை பெரியார் வலியுறுத்திய எழுத்து சீர்திருத்தம் பீடுந டை போடா நிலையில் முடங்கிக் கிடப்பது ஒன்றே போதும் தங்கள் கேள்விக் கு உரிய பதில் .

கேள்வி : பெரியார் வலியுறுத்திய எழுத்து சீர்திருத்தம் நடைபோடா நிலைக்கு காரணம் யார் ?
பதில் ; 'தமிழ் ஓலை' என்னு ம் தனிச் சுற்றிதழை - முதல் இதழை தாங்கள் ஒருமுறை கண்ணோட்டம் செலுத்திடின் உண்மைநிலை புரியும் யார் என்று.

Monday, June 8, 2009

080620091

கேள்வி: தாங்கள் எடுத்துரைக்கும் நாடுகள் முழுமையாக கடல் கொண்டிருக்கக்கூடும் என்று கருதுகிறீர்களா? அல்லது அதன் எஞ்சிய பகுதி உள்ளன சில என்று கருதுகிறீர்களா?

பதில் : கடல் கோளுக்கு இரையானது போக எஞ்சிய பகுதிகள் சில உள்ளன என்று கூறலாம்.

கேள்வி: நீங்கள் கூறும் ஊர்கள் எங்கு உள்ளன ?

பதில் : தமிழ் ஈழத்தில்

கேள்வி : அதற்குரிய சான்றுகள் என்ன?

பதில் : எடுத்துக்காட்டிற்கு யாழ்ப்பாணத்தைக் கொள்ளலாம். ஏழ்பனை நாடு என்னும் தொகைச் சொல்லே இன்று யாழ்ப்பாணம் என்று மருவி வ்ழங்குகின்றது என்பது என் முடிபு.

கேள்வி : ஈழம் என்னும் பெயர்ச் சொல் தோன்றக் காரணம் என்ன?

பதில் : ஏழ் நாடு என்னும் தொகைச் சொல்லே ஈழம் என்னும் பெயர்ச் சொல் தோன்ற அடித்தளமாக இருந்திருக்கக் கூடும்.

கேள்வி: இற்றைய இலங்கை அற்றைக்கு நடுவரை நாட்டில் இருந்ததாக கருதுகிறீர்களா? இல்லை என்று கருதுகிறீர்களா?

பதில் : நடுவரை நாட்டில் இலங்கை எனும் பகுதி இருந்ததை ஏற்கிறேன்; ஆனால் நான் ஏற்கும் இலங்கை இன்றில்லை. ஏன் எனின் சிவதருமோத்தரம் என்னும் நூலிற்கு உரை கண்டவர் மேருமலையின் அடிவாரத்தில் இருந்த இலங்கை கடல் கோளால் மறைவுற்றது என குறிப்பிட்டுள்ளார் என்பதனால் ஆகும்.

கேள்வி : முன்னிருந்த இலங்கை அழிவுற்றிருப்பின் இதுபோழ்துள்ள இலங்கை பிறக்கக் காரணம் என்ன?

பதில் : முன்பிருந்த இலங்கையில் வதிந்த மக்கள் கடல் கோளால் புலம் பெயர்ந்து தற்போதைய இலங்கையில் வதிந்த காரணத்தால் இலங்கை எனும் ஆகுபெயர் தோன்றக்காரணமாய் இருந்திருக்கக் கூடும்.

Sunday, June 7, 2009

07072009

பதில்: பலகொடுமுடிகளையுடைய பெருமலை என்பது நான் கொண்ட முடிபாகும். அப்பெருமலை மேருமலை என்பது அறிவார்ந்த பெருமக்கள் கொண்ட ஒருமித்த முடிபாகும்.
கேள்வி: தமிழ் நாட்டின் கண் பண்டு இருந்த அப்பெருமலையின் எல்லையினை சுட்டிக்காட்ட முடியுமா?
பதில்: முடியும். தென் கிழக்கு முதல் வடமேற்கு வரை செல்லுகின்ற இமய மலைப் போன்று வடமேற்கு தொடங்கி தென்கிழக்கின்கண் சென்றதாகத் தெரிகிறது. இம்மலையினையேபன்மலைய்டுக்கம் -மகேந்திரம் (வடமொழியில் ) என்று நம் முன்னோர் சுட்டிக்காட்டியுள்ளனர். மறைந்த குமரிக்கண்டம் என்னும் ஆங்கில நூலுள் இடம் பெற்றுள்ள வரைபடத்தின் மூலம் ஒரு பெருமலை யானது மேலைகடலில் தொடங்கி வடக்கும் தெற்குமாக குமரிக்குத் தென் பகுதியில் உள்ள நிலப்பகுதியின்கண் நெடுந்தூரம் சென்று பின் தென்மேற்காக திரும்பி மடகாஸ்கர் என்ற ஆப்பிரிக்கத் தீவுவரை சென்றுள்ளதை அறியமுடிகின்ற்து. அம்மலைக்கு கீழ்ப்பகுதியில் பெருமலை பிற இருந்ததாக தெரியவில்லை

Saturday, June 6, 2009

06062009

புலவர் அரசு பதில்கள் :

கேள்வி : இற்றைக்கு தமிழ் நாட்டின் வடஎல்லை திருத்தணி பகுதியும் தென் எல்லை குமரியும் உள்ளன போன்று பண்டு தமிழ் நாட்டின் வட தென் எல்லைகள் குறித்து தாங்கள் அளிக்கும் விளக்கம் என்ன ?

பதில் : இற்றைக்கு தமிழ் நாட்டின் நாற்புற எல்லைகள் மொழி வழி மாநிலங்கள் என்று பிரித்தகாலை தாங்கள் சுட்டிக்காட்டிய எல்லைகள் வரம்பாக இருப்பனபோன்று பண்டு வட தென் எல்லைகள் முறையே வேங்கடம் மற்றும் குமரியினை எல்லைகளாக கொண்டிருந்தன ; கிழக்கு மேற்கு எல்லைகளாக கடல்கள் இருந்தன .

கேள்வி : வடபால் வேங்கடம் என்னும் எல்லை இருந்ததாக ஏற்றுக்கொள்வது போன்று வேங்கடம் எனும் பெயர்ச்சொல் திருப்பதி- ஏழு மலையினைக் குறித்து வழங்கியது என்பதை ஏற்கிறீர்களா ?

பதில் : மறுக்கிறேன் .

கேள்வி : அதற்குரிய விளக்கம் என்ன?
பதில் : "வடா அது பனிபடு நெடுவரை வடக்கும்'' என்னும் புற நானூற்றின் ஆறாம் பாடலும் பதினேழாம் பாடலாக உள்ள "தென்குமரி வ்டபெருங்கல் " என்ற விடத்து "வ்டபெருங்கல் "என்ற தொகைச்சொல்லும் "வடதிசை கங்கையும் இமயமும் கொண்டு தென்றிசை யாண்ட தென்னவன் வாழி " என்னும் சிலப்பதிகார அடிகளும் வேங்கடம் என்னும் பெயர்ச்சொல் திருப்பதி -ஏழு மலையினைக் குறித்து வழங்கியது என்பதை மறுக்கின்றது . எனவே , வேங்கடம் எனும் பெயர்ச்சொல் இமயத்தைக் குறித்து வழங்கியது என்பதை உணர இடம் உள்ளது.

கேள்வி :வேங்கடாசலம், வேங்கடேஷ்வரன், வேங்கடேஷ் எனும் பெயர்கள் திருமாலைச் சுட்டி வழங்கும் நிலை உள்ள பொழுது வேங்கடம் எனும் பெயர் இமயத்தை சார்ந்து வழங்குகிறது என தாங்கள் அளிக்கும் கருத்துக்கு ஆதாரம் என்ன?
பதில்: வெண்கை இடம் கொண்டான் வெங்கிடத்தான் என்னும் பொருளில் வழங்கத் தலைப்பட்ட தொகைச் சொல் கால ஓட்டத்தில் வெங்கிடத்தான் - வேங்கிடத்தான் - வேங்கடத்தான் என உலக வழக்கில் மருவி வழங்குகின்றது. வெண்கை என்பது வெண்கைலை என்னும் தொகைச் சொல்லின்கண் உள்ள ஈற்றொலி கெட்டு வெண்+கை(லை)= வெண்கை என வழங்கும் தொகைச் சொல்லிற்கு உட்பொருள் வெள்ளீய பனிமலை என்பதாகும்.

கேள்வி: தென்பால் எல்லை குமரி என வரும் பெயர்ச் சொல் ஆகுபெயரா? காரணப்பெயரா?
பதில்: காரணப்பெயர்.

கேள்வி: : காரணப்பெயர் தோற்றத்திற்கு மூலமாய் அமைந்தது கடலா? ஆறா? மலையா ? விளக்கம் வேண்டும்.

பதில் : குமரி என்னும் காரணப்பெயர் தொடக்கத்தில் நட்டையும் அதன்பின் கடல், மலை, மற்றும் ஆறினைக் குறித்து பொருல் திரிந்து வழஙுகின்றது என்பதே யான் கொண்ட முடிபாகும்.



கேள்வி : குமரி என்னும் காரனப்பெயருக்கு சிலர் அளவில் மலையினையும் சிலர் அளவில் ஆறினையும் பொருல் கொள்ளும் நிலை உள்ளபொழுது தஙள் மட்டும் நாடு என பொருள் கொள்வதற்கு உரிய சான்று என்ன?

பதில்: "பஃருளி யாற்றுடன் பன்மலை யடுக்கத்து குமரிக் கொடுங் கடல் கொள்ள "என வரும் அடிகளீல் இடம் பெற்றுள்ள குமரிகோடுங் என்னும் தொகைச் சொல்லிற்கு மலை என பொருள் கொண்டோர் உண்டு. "தெனாஅது உருகெழு குமரியின் தெற்கும்"என வரும் புறனானூற்று 6-ம் பாடலுக்கு ஆறு என உரை கண்டோரும் உண்டு. இதன் மூலம் குமரி என்னும் பெயர்ச் சொல் ஆறா? மலையா? என ஒரு முடிபுக்கு வர தடை இருந்து வருகின்றது. அதே நேரம் நான் கூறும் நாடு என்னும் பொருள் கொள்ள தடையில்லை. ஏன்? எனின் "குமரியம் பெருந்துறை யயிரை மாந்தி " என என வரும் 67-ம் புறப்பாடல் உறுதுணையாக உள்ளது. "குமரியம் பெருந்துறை" எனின் நடுவரை நாட்டின் நீர் நிலையினை

கேள்வி: குமரியம் பெருந்துறை யயிரை மாந்தி என்ற வரிகளுக்கு தாங்கள் தரும் விளக்கம் கொஅடு என்னும் சொல்லிற்கு மலை என்னும் பொருள் உள்ளதால் குமரி என்னும் நிலைமொழியுடன் கோடுஎன்னும் வருமொழி இணைந்து குமரிக் கோடு என வழங்கும் பொழுது நாடு என பொருள் கொள்ள தடை ஏற்படுவதை ஏற்கிறீர்களா?


பதில்: ஏற்பதற்கு இல்லை. ஏன் எனின் குமரி என்னும் சொல்லிற்கு நடு என்னும் பொருளும் கோடு என்னும் சொல்லிற்கு வரை என்னும் பொருளையும் கொள்ளின் ஒருசேர பொருந்தும்.

கேள்வி: நடுவரை,குமரிக்கோடு என்னும் தொகைச் சொற்கள் தோன்றக்காரணமாய் இருந்தது யாது?

பஃருளியாற்றுடன் பன்மலை யடுக்கத்து குமரிக் கோடுங்கொடுங்கடல் கொள்ள எனவரும் வரிகளில் இடம் பெற்றுள்ள "பன்மலை யடுக்கத்து " என்னும் தொகைச் சொல்லிற்கு தாங்கள் கொள்ளும் பொருள் என்ன ?